சேலத்தில் கோயில் கருவறைக்குள் நுழைந்த பட்டியலின இளைஞரை திமுக நிர்வாகி தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து இயக்குநர் பா.ரஞ்சித் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், பெரியார், அண்ணா ஆகியோர் முன்வைத்த பிராமண மற்றும் சாதி எதிர்ப்பால் அரசியல் மாற்றத்தைக் கண்ட தமிழ்நாடு, இன்னும் சமூக மாற்றத்தைக் கண்டடையாமல் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, ஒரு பக்கம் பட்டியலின மக்களுக்குக் கோயில் திறப்பு, மற்றொரு பக்கம் பட்டியலின இளைஞர் கோயிலுக்கு நுழைவது பெரும் குற்றம் எனத் தீண்டாமை கொடுமைகள் தொடர்வதாகவும், திமுக ஆட்சியில் சமூக அநீதி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பெரியார், அண்ணா முன் வைத்த பிராமன&சாதி எதிர்ப்பில் அரசியல் மாற்றத்தை கண்ட தமிழ்நாடு, இன்னும் சமூகமாற்றத்தை கண்டடையாமல் இருக்க காரணம் என்ன? உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் மத சாதி உணர்வுக்கு எதிரானவர்களா? மதமும் சாதியும் சமூகதளத்தில் வேறு வேறா? திமுக ஆட்சியில் தொடரும் சமூக அநீதி!!!
— pa.ranjith (@beemji) January 30, 2023
மேலும் "உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் மத சாதி உணர்வுக்கு எதிரானவர்களா? மதமும் சாதியும் சமூக தளத்தில் வேறு வேறா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Pa. ranjith, Threatened a Dalit