முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட தொழிலதிபர்களுக்கு ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ப. சிதம்பரம் கருத்து

நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட தொழிலதிபர்களுக்கு ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ப. சிதம்பரம் கருத்து

ப.சிதம்பரம் (கோப்பு படம்)

ப.சிதம்பரம் (கோப்பு படம்)

"வராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்துள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம்."

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட தொழிலதிபர்களுக்கு ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரூ. 68,000 கோடி வராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்துள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம். இந்த நடவடிக்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா!

இந்த மாபெரும் தவறைத் திருத்துவதற்கு ஒரே வழிதான் உண்டு. ரிசர்வ் வங்கி உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடவேண்டும். மீண்டும் இந்த மூன்று நபர்களுடைய வராக் கடன் தொகைகளை ‘வாராக் கடன்’ என்று பேரேட்டில் எழுதி அந்தக் கடன்களை வசூலிக்கும் முயற்சிகளை முடுக்கி விடுக என்று உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see:

First published:

Tags: Businessman Vijay Mallya, Nirav modi, P.chidambaram