மாண்டஸ் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது.
வங்க கடலில் உருவாகி மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு புதுச்ரேி - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க உள்ளது. மாண்டஸ் தீவிர புயலாக நேற்று உருவான நிலையில் இன்று காலை வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 3 மணி நேரத்தில் மாண்டஸ் தீவிர புயல் வலுவிழந்து புயலாக மாறும் என அறிவிக்ப்பட்டுள்ளது. . தற்போது மாண்டஸ் புயல் சென்னைக்கு கிழக்கே 320 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இதனிடையே இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட மின கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தருமபரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்து.
நாளை (டிசம்பர் 10) கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ங்களுக்கு ஆரெஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.