தவறு செய்து திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு ஏற்புடையது என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (O. Panneerselvam) குட்டிக் கதை கூறியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடித்துள்ள சசிகலா (Sasikala), அதிமுகவை கைப்பற்ற சட்டரீதியில் போராடி வருகிறார். முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, 2017-ம் ஆண்டு நடந்த அதிமுக (ADMK) பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் அடிப்படையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோர் அறிவித்து விட்டனர். சிறையில் இருந்து திரும்பி வந்த பின்னர், அதிமுகவில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் சசிகலாவுக்கு வெளிப்படை ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை.
இதையும் படிங்க : அதிமுகவில் சசிகலா? ஓ.பன்னீர்செல்வம் சூசக கருத்து!
இந்நிலையில், தவறு செய்து திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு ஏற்புடையது என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குட்டிக் கதை கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ரஜினியை சந்தித்தது ஏன்? சசிகலா தரப்பில் விளக்கம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Christmas, O Panneerselvam