ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் காங்கிரஸ் - அதிமுக இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம். இடைத் தேர்தலில் பாஜக போட்டியிட்டால் தேசிய கட்சி என்பதன் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு ஆதரிப்போம் என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதாகவும் அறிவித்தார்.
தற்போது ஜி.கே. வாசனை இதுதொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் சந்தித்துப் பேசினார். அதில் தங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என வாசனிடம் அவர் வலியுறுத்தி இருக்கலாம் எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸை சந்தித்துப் பேசவுள்ளதாகவும் ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Erode, Erode Bypoll, Erode East Constituency, GK Vasan, O Pannerselvam, OPS