வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே 12 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தியதாக இளைஞர் ஒருவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
சேத்துவண்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரசாந்த், அதே பகுதியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவியை பள்ளிக்கு செல்லும்போது காதலிக்க சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் செல்ஃபோனில் அப்பெண்ணின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு காதலிக்கும்படி தொந்தரவு கொடுத்ததால் மன உளைச்சல் அடைந்த சிறுமி பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் பிரசாந்தை கைது செய்த அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு அந்த இளைஞரை செய்து கைது செய்தனர்.
Also see...
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.