ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு தென்னரசுவையும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு செந்தில் முருகனையும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளனர். இதனால் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பான வழக்கில், ஓபிஎஸ் ஆகியோரை உள்ளடக்கிய பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே இபிஎஸ் தரப்பு வேட்பாளரை ஆதரிக்க ஓபிஎஸ்ஸுக்கு கோரிக்கை வைத்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்தார். இந்த நிலையில் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்த ஓபிஎஸ்ஸின் நிலைப்பாடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேட்டியளித்தார். ஓபிஎஸ்ஸின் அறிக்கையை வாசித்த அவர், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற பாடுபடுவோம்” என தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், “எங்கள் வேட்பாளர் போட்டியா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். எங்கள் வேட்பாளரை வாபஸ் பெறக்கோரிய அண்ணாமலையின் கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை. வேட்பாளர் தேர்வு குறித்த படிவம் இதுவரை எங்களுக்கு வரவில்லை. அதனை நாங்கள் பார்க்கவும் இல்லை. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் அவரை ஆதரிப்போம்” என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AIADMK, O Panneerselvam