தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அதில் பங்கேற்ற கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்புவிடுத்தார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, “2023 ஆம் ஆண்டுக்கான முதல் பேரவைத் தொடர் ஆளுநர் உரையுடன் வரும் 9 ஆம் தேதி தொடங்கும்” என்றார். தமிழ்நாடு ஆளுநர் சட்டமன்ற பேரவையில் ஆளுநர் உரை நடைபெறும் எனவும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முக கவசம் அணிய வேண்டும், கொரோனோ பரிசோதனை அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவராக உதயகுமாரை நியமனம் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்து கடிதம் எழுதியிருந்தார். அதன் மீது ஏற்கனவே விளக்க உரையை வழங்கியுள்ளேன். அதற்கு இரு தரப்பினரும் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை எனவே அதே நிலை நீடிக்கிறது” என தெரிவித்தார். அதன் அடிப்படையில் எதிர்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வமே நீடிக்கிறார் என தெரிய வந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.