நான் முதலமைச்சரை சந்தித்ததை நிரூபிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தயாரா என ஒ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்ல வந்த முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை குறித்து என்னை பற்றி ஏதாவது விமர்சனம் வந்தால் கேளுங்கள் பதில் சொல்கிறேன் என்றும், எடப்பாடி பழனிசாமி நடத்திய போராட்டம் எனக்கு எதிரானதாக கருதவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், முதலமைச்சருடன் 1 மணி நேரம் பேசியதாக என்னுடன் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிசாமிக்கு சவால் விட்டு உள்ளனர். முதலமைச்சரை நான் சந்தித்ததை பழனிசாமி நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார். நிரூபிக்க வில்லை என்றால் பழனிசாமி விலக தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai Airport, Cm edapadi palanisami, O Pannerselvam, OPS, OPS - EPS