முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இனி அவகாசம் கிடையாது.. அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டம்..!

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இனி அவகாசம் கிடையாது.. அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டம்..!

ஆதார் - மிண் இணைப்பு

ஆதார் - மிண் இணைப்பு

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள் எனவும் கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாட்டில் வீடு, கைத்தறி, விசைத்தறி மற்றும் விவசாய மின் இணைப்பை பெற்றிருக்கும் நுகர்வோர், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மாநில அரசு அறிவித்தது. இணைப்புப் பணிகள், நவம்பர் 15ம் தேதி தொடங்கின. 2, 800 குழுக்கள் அமைக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, அவகாசம் மூன்று முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், இதுவரை 99 சதவீதம் பேர் தங்களது மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், மின் வாரியம் அளித்த அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க 2 நிமிடம் கூட ஆகாது.. உங்க செல்போனிலேயே ஈஸியா செய்ய இதோ வழிமுறை...

இதுதொடர்பாக கரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “தமிழகத்தில் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. மின் இணைப்புடன் ஆதாரை இதுவரை 2 கோடியே 66 லட்சம் பேர் இணைத்துள்ளனர். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள். கூடுதல் அவகாசம் வழங்கப்படாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், “ முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், மொத்தமுள்ள 2.67 கோடி வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி & விவசாய இணைப்புகளில் இன்று காலை 11.00 வரை 2.66 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இது 99.57% ஆகும். இதுவரை இணைத்திடாதவர்கள், கடைசி நாளான இன்று மாலைக்குள் விரைந்து இணைத்திட வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

First published:

Tags: Aadhaar card, Electricity