நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில், மரத்தின் மீது ஏறி விளையாடிய கரடியை பார்த்து தேயிலைத் தொழிலாளர்கள் பீதியடைந்தனர்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இந்த தேயிலை தோட்டத்தில் உள்ள மரம் ஒன்றின் மீது கரடி ஒன்று ஏறி இறங்கி விளையாடியது. இதை பார்த்து பீதி அடைந்த தேயிலைப் பறிக்கும் பணியிலிருந்த சிலர், அதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.சிறிது நேரம் அங்கு விளையாடிய கரடி, பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
இதேபோல் நேற்று முன்தினம் தலைகுந்தா பகவான் கோவிலின் கதவை உடைத்து 2 கரடிகள் புகுந்தன. அங்கிருந்த நெய்,எண்ணெய்,தேன்,வாழைப்பழம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை சேதப்படுத்தியது. கரடிகளை பார்த்த தெருநாய்கள் வேறு பகுதிக்கு ஒடிவிட்டன. அதிகாலை வேளையில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் கரடிகள் கோவிலுக்குள் வந்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடும் வெயில் காரணமாக தண்ணீருக்காக கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் சமீபகாலமாக தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகளில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. கரடிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்டறிந்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.