நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வனப்பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக பல ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலானது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது காட்டுத்தீயானது ஏற்பட்டு வருகின்றது. கடும் வறட்சி காரணமாகவும் இலைகள் காய்ந்து கிடப்பதன் காரணமாகவும் காட்டு தீ ஏற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நேற்று இரவு கோத்தகிரி மலைப்பகுதியல் சுமார் 9 மணி அளவில் காட்டுத்தீ வேகமாக பரவியது. மலைப்பாங்கான இடத்தில் காட்டுத்தீ பரவியதால் உடனே தீயணைப்பு மற்றும் காவல்துறையினரகக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்தனர். காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினருடன் இணைந்து வேட்டை தடுப்பு காவலர்கள், வன ஊழியர்கள் இன்று அதிகாலை வரை போராடி அணைத்தனர்.
Also read... அன்னிய மரங்களை அகற்றுவதில் அரசும், வனத்துறையும் சாதகமான பாதையில் செல்லவில்லை - உயர் நீதிமன்றம்
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் காட்டு தீயை கட்டுப்படுத்த சிரமம் ஏற்பட்டது. காட்டு தீ காரணமாக வன உயிரனங்கள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்தன. இரவு 9 மணி முதல் காலை7 மணி வரை தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் காட்டு தீ காரணமாக எரிந்து இருப்பது குறிப்பிடதக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.