காதல் திருமணம் செய்துகொண்ட 20 நாளில் கருத்து வேறுபாடு - இளம்ஜோடி தற்கொலை முயற்சி - கணவர் உயிரிழப்பு - மனைவி மருத்துவமனையில் சிகிச்சை
காதல் திருமணம் செய்துகொண்ட 20 நாளில் கருத்து வேறுபாடு - இளம்ஜோடி தற்கொலை முயற்சி - கணவர் உயிரிழப்பு - மனைவி மருத்துவமனையில் சிகிச்சை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதிகள் 20 நாட்களில் கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அந்த அதிர்ச்சியில் மனைவி கழுத்து அறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதிகள் 20 நாட்களில் கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அந்த அதிர்ச்சியில் மனைவி கழுத்து அறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியிலுள்ள ஜீவாநகரை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் குறும்படம் எடுக்கும் புகைப்பட கலைஞராக பணியாற்றியவர். இவருக்கு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சாலினி என்பவரின் அறிமுகம் கிடைத்த நிலையில், இருவரும் நட்புடன் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில், இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 20 நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணமாகி ஒருசில நாட்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சாலினி, கணவன் கண் முன்னே தாலியை கழற்றி விட்டதாக தெரிகிறது. மனைவியின் செயலை பார்த்து விஷ்ணு அதிர்ச்சி அடைந்து. கோபத்தில் வேகமாக தனது அறைக்கு சென்று உள்பக்கமாக கதவை பூட்டியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு விஷ்ணு தூக்கிட்டு பிணமாக தொங்கியது தெரிய வந்தது. இது குறித்து கோட்டாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே கணவர் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்த சாலினி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தன்னைத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிகிறது.
இதில் கழுத்து அறுபட்ட சாலினியை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விஷ்ணு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். விஷ்ணுவுக்கும், சாலினிக்கும் எதற்காக அடிக்கடி தகராறு ஏற்பட்டது என்று தெரியவில்லை.
மேலும் கழுத்தில் காயம் அடைந்த சாலினிக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக கோட்டாறு காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.