தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீரமானத்திற்கு ஓப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிடகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு அளித்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டுமென செப்டம்பர் 2018-ல் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகையிலிருந்து எந்த பதிலும் வராத நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். 7 மாதம் ஆகியும் தீர்மானத்திற்கு ஓப்புதல் வழங்காமல் இருப்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றும் முறையிட்டுள்ளார்.
நாளை மறுநாள் நளினியின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Watch
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.