நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணி, தெற்குப்பொய்கை நல்லூர், பரவை, பூக்காரத் தெரு, சிவன்கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு முல்லைப் பூ சாகுபடி நடைபெறுகிறது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் துவங்கி அக்டோபர் வரை இந்த முல்லைப் பூ சீசன் காலமாகும்.
சீசன் காலமான தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் திருமணம் மற்றும் கோயில் விழாக்கள் சில நிபந்தனையுடன் தடை விதித்துள்ளதாலும் முல்லைப் பூக்களைப் பறித்து வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியததாலும், முல்லைப் பூவை செடியில் இருந்து பரிக்காமல் செடியில் பூத்துக்குலுங்கி வருகிறது.
Also see:
செடியில் இருந்து பூக்களைப் பறிக்காததால், பூக்கள் கீழே கொட்டி வீணாகி வருவதுடன் பூச்செடிகள் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தத் தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஆயிரம் கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். எனவே தமிழக அரசு முல்லைப் பூ சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.