நாகை அருகே சாராய வியாபாரிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர்அருகே திருக்கண்ணங்குடி ஊராட்சி பெரிய கூட குடியை சேர்ந்தவர் அறிவழகன் மகன் தரணிகுமார்(வயது 27). சாராய வியாபாரியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெரிய மூக்கால்வட்டம் மற்றொரு சாராய கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் காளமேகம் மகன் ஹரிகரன் (வயது27) என்பவருக்கும் சாராய கடத்தலில் ஏற்பட்ட தகராறு மோதலில் முடிந்துள்ளது. தரணிகுமாருக்கும் ஹரிகரனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில், ஹரிஹரன் செம்பியன்மாகதேவி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் திருடி, குண்டாஸ் வழக்கில் கைதாகி சில தினங்களுக்கு முன்பு சிறை சென்று வந்துள்ளார்.
Also Read: மதுஅருந்தும் ஆசையில் தப்பி ஓடிய கொலை குற்றவாளி.. திண்டாடிய போலீஸ் - குழித்துறையில் ருசிகர சம்பவம்
இதனிடையே தரணிகுமாருக்கும் ஹரிஹரனுக்கும் நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஹரிஹரன்(27), தந்தை காளமேகம்(50) மற்றும் தம்பி ரேவந்(21) பலத்த காயம் ஏற்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து இரவு 8 மணியளவில் ஹரிகரன் நாகையில் இருந்து 10 பேர் கொண்ட கும்பலுடன் ஆயுதங்களோடு தரணிக்குமாரின் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த தரணிக்குமாரின் உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளார்.
இந்த தாக்குதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் ராஜா (எ) முருகையன் மற்றும் திருக்கண்ணங்குடியைச் சேர்ந்த செல்வராஜ்,ஜோதிபாசு,சுதாகர்,சரண்யா உள்ளிட்டோர் வெட்டு காயங்களுடன் படுகாயம் அடைந்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மர்ம கும்பல் திருக்கண்ணங்குடி ரயில்வே கேட் அருகே நிறுத்தி இருந்த 2 இரு சக்கர வாகனங்களுக்கும் தீ வைத்து விட்டு தப்பி சென்றதால், இரு சக்கர வாகனங்கள் பற்றி எரிந்து அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
வெட்டு காயமடைந்த 5 நபர்களும் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவ இடத்தில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டு மோதல் நடந்த இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் தரணி குமார் வீடு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் தீயை அணைத்து மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர்.இருப்பின் உயிர்ச்சேதங்கள் ஏதுமின்றி தரணி குமார் வீடு,வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மாட்டுக்கொட்டகைகள் முழுவதுமாக எரிந்து நாசமானது.மேலும் இதுதொடர்பாக கீழ்வேளூர் போலீசார் ஹரிகரன்,குருபாலன், சூர்யா, சந்திரசேகரன்,வசந்த், தமிழ்மாறன், தன்ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
செய்தியாளர்: பாலமுத்துமணி (நாகப்பட்டிணம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Clash, Crime News, Nagappattinam, Police, Tamil News