நாகையில் காவல் நிலைய வாயிலில் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள், ஒருவருக்கொருவர் நுரை பொங்கும் ஸ்பிரே அடித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நாகை பாரதிதாசன் அரசு கல்லூரியில் பயிலும் வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவனின் பிறந்தநாளை ஒட்டி காவல் நிலைய வாசலில் மாணவர்கள் கூடினர்.எந்தவிதமான அச்சமுமின்றி காவல் நிலையத்தின் முன்பு வந்த கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனத்தை நடுவில் நிறுத்தி அதன்மீது வைக்கப்பட்டு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியது மட்டுமல்லாமல் தலையில் நுரை பொங்க ஸ்பிரே அடித்துக் கொண்டு பிறந்தநாள் கொண்டாடுவதாக ரகளையில் ஈடுபட்டனர்.
கெத்து காட்டுவதற்காக காவல் நிலையத்தின் முன்பு நண்பனின் பிறந்தநாளை கொண்டாடுவதாக கூறிய கல்லூரி மாணவர்கள், காவல் நிலையத்தின் உள்ளே இருந்து காவலர்கள் பார்த்துக் கொண்டிருப்பதை சுதாரித்த பிறகும் எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் ஆர்வத்தோடு பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
எப்பொழுதும் காவல் நிலையத்தின் வாசலில்தான் கேக் வெட்டுவோம் என்றும், நாங்கள் சிங்கிள் பசங்க அப்படிதான் இருப்போம் என்றும் காவல் நிலையம் முன்பு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
-செய்தியாளர்: பாலமுத்துமணி.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.