கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகம் முழுவதும் போடப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் மட்டுமின்றி வர்த்தகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சில இடங்களில் வாடகை வீடுகளின் உரிமையாளர்கள், தங்களது வீடுகளில் குடியிருப்பவர்கள் நலன் கருதி வாடகை பணத்தை தள்ளுபடி செய்து மனிதாபிமானத்தை காட்டி வந்தனர்.
இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக இரண்டு மாதங்களாக கடைகள் திறக்கப்படாமல் வருமானம் இல்லாமல் தற்போது கடைகளை திறந்துள்ள தனது காம்ப்ளக்ஸ் வர்த்தகர்களின் ஒருமாத வாடகையை தள்ளுபடி செய்து இருக்கிறார் நாகை நம்பியார் நகர் பகுதியை சேர்ந்த பாரி.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காம்ப்ளெக்சில் ஜெராக்ஸ் கடை, டீ கடை, ஸ்டூடியோ என சுமார் 8 கடைகளுக்கு உண்டான ஒரு மாத கால வாடகை பணமான ரூபாய் 55 ஆயிரத்தை உரிமையாளர் பாரி வேண்டாம் என்று தள்ளுபடி செய்ததால், வர்த்தகர்களுக்கு சோகத்திலும் ஒரு நிம்மதி கிடைத்துள்ளது.
கடைகளின் வாடகையை தள்ளுபடி செய்ததற்கு உரிமையாளர் பாரிக்கு வர்த்தகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். திமுகவின் நாகை மாவட்ட மாணவரணி பொறுப்பில் இருக்கும் பாரி, திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில் என்னுடைய பங்களிப்பாக இந்த உதவிகளை தான் வர்த்தகர்களுக்கு செய்ததாக தெரிவித்துள்ளார்.
காம்ப்ளக்ஸ் உரிமையாளர் பாரியின் இந்த மனிதாபிமான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.