அதிமுக தலைமை நிலையத்தில் சமூக விரோதிகள் நுழையக் கூடும் எனக் காவல் துறையிடம் புகார் கொடுத்தபோதும், காவல்துறை உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்த நிலையில், இதனை கண்டித்தும் விளக்கம் அளித்தும் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், “அதிமுக தலைமை நிலையத்தில் சமூக விரோதிகள் நுழையக் கூடும் எனக் காவல் துறையிடம் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தோம். இருந்தும் உரிய நடவடிக்கையை காவல்துறை எடுக்கவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் காவல்துறை மீது புகார் கூறியுள்ளார்.
இதிலே நமக்குப் புரியாத புதிர், பழனிசாமி என்ன சொல்ல வருகிறார் என்பதுதான். பழனிசாமி கோஷ்டியின் சார்பில் சமூக விரோதிகள் அதிமுக அலுவலகத்தில் நுழையக் கூடும் என்பதுதான். ஆனால் ஜூலை 11 ஆம் தேதி காலை அதிமுக அலுவலகத்திற்குள்
நுழைந்தது ஓ.பன்னீர் செல்வம் கோஷ்டி.
எடப்பாடி பார்வையில் ஓ.பன்னீர் செல்வம் சமூக விரோதியாகத் தெரியலாம். ஆனால் காவல் துறை பார்வையில், அவர் ஒரு முன்னாள் துணை முதல்வர் மட்டுமல்ல, எடப்பாடி போல முதலமைச்சராக சில காலம் இருந்தவர். அதுமட்டுமல்ல, அதிமுக அலுவலகத்திற்குள் அவர் வந்த காலக்கட்டத்தில் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். அதாவது கட்சியில் எடப்பாடிக்கு மேலான அதிகாரத்தில் இருப்பவர்.
ஜூலை 11 பொதுக்குழுவுக்கு முன் நடந்த அந்தக் கட்சியின் பொதுக்குழு முடிவுப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டது என்று எடுத்துக் கொண்டாலும், அவர்களது மற்றொரு கூற்றுப்படி, பன்னீர்செல்வம் அந்த கட்சியின் பொருளாளர்.

எடப்பாடி பழனிசாமி
எந்த விதத்தில் பார்த்தாலும் பழனிசாமி, அந்தக் கட்சியில் ஏற்றுள்ள பதவியைவிட பெரிய பதவி பன்னீருடையது. அவருக்கு அந்த அலுவலகத்திற்குள் வர எல்லா உரிமையும் உள்ளது. நிலைமை அப்படி இருக்க, ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளரோ அல்லது பொருளாளரோ, மற்றும் அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர், அந்தக் கட்சியின் அலுவலகத்திற்குள் செல்வதை எப்படிக் காவல்துறை தடுத்து நிறுத்த முடியும்? சராசரி அறிவு படைத்தவனுக்குக் கூட புரியும் இந்த விவகாரம். நான்கு ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி புரிந்தது மட்டுமின்றி, காவல் துறையை தன்னிடம் வைத்திருந்த முன்னாள் மாண்புமிகுவுக்குத் தெரியாது போனது எப்படி?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முரசொலி
உள்கட்சி விவகாரங்களை நீதிமன்றத்திற்குக் கொண்டு வராதீர்கள், நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள் என்று நீதிமன்றமே கூறிவிட்ட நிலையில், காவல் துறை அதனுள் தலையிட முடியுமா? உள்கட்சி விவகாரங்கள் எல்லை மீறி சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மாறிய நிலையில்தான் காவல்துறை தலையிட்டுள்ளது.
Must Read : அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது?... ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு 25ம் தேதி ஆஜராக வருவாய்துறை நோட்டீஸ்
காவல்துறை, இந்த விவகாரத்தில் எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலையோடு செயல்பட்டுள்ளது. பழனிசாமி கூட்டம் பாராட்ட வேண்டாம், பழி சுமத்துவதை நிறுத்தட்டும்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.