முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மு.க.ஸ்டாலின், மோடி

மு.க.ஸ்டாலின், மோடி

நியூட்ரினோ திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

  • Last Updated :

தேனி மாவட்டத்தில் அமையவிருக்கும் நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில், பல்லுயிரிய வளம் மிகுந்த மேற்கு மலைத்தொடரில் அம்பரப்பர் மலையில், நியூட்ரினோ துகள்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்த ஆராய்ச்சி மையம் அமைக்கும் முயற்சியில் 2010-ம் ஆண்டு முதல் மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. இந்தத் திட்டத்துக்கு தேனி மாவட்ட மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்தத் திட்டத்துக்கு பெறப்பட்ட அனுமதிக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் உயர் நீதிமன்றம், பசுமைத் தீர்ப்பாயம் உள்ளிட்ட அமைப்புகளில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்தநிலையில், தேனி மாவட்டத்தில் மேற்கொள்ளவுள்ள நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்படும் சம்பல் குட்டக்குடி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. மலை உச்சியில் 1000 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் தோண்ட திட்டமிடப்பட்டுள்ளது . இதனால் பாறை சரிவு, மலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஏற்கனவே 2021 ஜூன் 17 இல் இதுதொடர்பான இது தொடர்பாக மனு அளித்துள்ளது. நியூட்ரினோ திட்டத்தால் தேனி பொட்டிபுரம் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். குறிப்பாக வனப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்படும் . இயற்கை கட்டமைப்பு சிதைவுகளும் விவகாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பே முக்கியம் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு பட்ஜெட்டில் விடை கிடைக்கும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

top videos

    தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கக் கூடாது. நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இதுகுறித்து அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கும், வன விலங்குகள் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படுத்தும் நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: MK Stalin, Neutrino Project