முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஆதரிக்கவேண்டும் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஆதரிக்கவேண்டும் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழக சட்டப் பேரவை

தமிழக சட்டப் பேரவை

தாலிக்குத் தங்கம் திட்டம் நிறுத்தப்படுவது குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :

திருமணம் என்ற தகுதிக்கு முன்பு கல்வி என்ற நிரந்தர சொத்து பெண்களுக்கு வேண்டுமென்பதால் திருமண உதவி திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், கட்சி பாகுபாடின்றி அனைவரும் இத்திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என முதலமைச்சர் பேசினார்.

திருமண உதவி திட்டம் மாற்றியமைக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், ‘1989ம் ஆண்டு இத்திட்டத்திற்கு முதல் முதலாக 5,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. 2011ம் ஆண்டில் திமுக ஆட்சியில் தான் திருமண உதவிக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்படும் என அறிவித்து செயல்படுத்தப்பட்டது. இடையில் இத்திட்டத்தை நிறுத்திய அதிமுக அரசு பின்னர் மீண்டும் செயல்படுத்தியது.

அதிமுக அரசு திருமண உதவியை 50 ஆயிரம் ரூபாய், 8 கிராம் தங்கம் என உயர்த்தி அறிவித்தது. நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்ததில் 24.5% மட்டுமே தகுதியான பயனாளிகள் என கண்டறியப்பட்டுள்ளது. கணக்குத் தணிக்கை குழு அறிக்கையின் மூலம் இத்திட்டத்தில் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.

முறைகேடு செய்தவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நாற்பத்தி மூன்று வழக்குகள் பதிவு செய்து நாற்பத்தி மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உயர்நிலைக் கல்வியில் பெண்கள் சேர்வது 46% மட்டுமே இருப்பதால் அதை சரி செய்ய வேண்டும் என்பதால் தான் தாலிக்கு தங்கம் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பெண் உரிமை கொள்கையின் மறுவடிவம் தான் இந்த நிதி உதவி வழங்கும் திட்டம். திருமண உதவி திட்டத்தின் கீழ் 1 லட்சம் பேர் மட்டுமே பயனடைந்தனர். ஆனால் உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் 6 லட்சம் பேர் பயனடைய உள்ளனர். திருமணம் என்ற தகுதிக்கு முன்பு கல்வி என்ற நிரந்தர சொத்து உரிமை பெண்களுக்கு வேண்டும். பெண்ணுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் இத்திட்டத்தை மாற்றியமைத்துள்ளோம்.

ரூ.5.70 லட்சம் கோடி இருந்த கடனை ரூ.5.63 லட்சம் கோடியாக திமுக குறைத்தது- பழனிவேல் தியாகராஜன் பதிலடி

சமூக நீதி, பெண் கல்வி, வெளிப்படைத்தன்மை உள்ளிட்டவை இத்திட்டத்தின் நோக்கம் என்பதால் கட்சி பாகுபாடின்றி இத்திட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய எதிர்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, ‘ஏற்கனவே விண்ணபித்து காத்திருக்கக்கூடியவர்களுக்கு நிதி உதவி அளிப்பதோடு, இத்திட்டத்தை தொடர வேண்டும் என்றார். மேலும், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் என்பதால் தான் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

First published:

Tags: MK Stalin, TN Assembly