தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் விஸ்வா தீனதயாளன் மறைவு செய்திக் கேட்டு வார்த்தைகளால் விவரிக்க முடியாத அதிர்ச்சி அடைந்ததாக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் பி.காம் படித்த டேபிள் டென்னிஸ் விஸ்வா தீனதயாளன் ஷில்லாங்கில் இன்று தொடங்கும் 83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக கௌஹாத்தியில் இருந்து சக போட்டியாளர்களுடன் காரில் சென்றுள்ளார்.
ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த 12 சக்கரங்களுடன் கூடிய டிராய்லர், கார் மீது மோதி விபத்துக்குள்ளாது. இதில், கார் ஓட்டுநர் மற்றும் விஸ்வா தீனதயாளன் உயிரிழந்தார். அவருடன் பயணித்த மூன்று பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விஸ்வா தீனதயாளனின் உடல் இன்று காலை சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில், விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டின் நம்பிக்கைக்குரிய இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வ தீனதயாளனின் மரணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Vishwa Deenadayalan: தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் சாலை விபத்தில் மரணம்: போட்டியில் கலந்துகொள்ள சென்றபோது சோகம்
இதேபோல், மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் தீனதயாளன் விஷ்வா, 83வது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க ஷில்லாங்கிற்குச் செல்லும் வழியில் மேகாலயாவில் உள்ள ரி-போய் என்ற இடத்தில் விபத்தில் உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வருத்தமாக உள்ளது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.