முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 5 மாநில சட்டமன்ற தேர்தல் : வெளிநாடுவாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒப்புதல்

5 மாநில சட்டமன்ற தேர்தல் : வெளிநாடுவாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒப்புதல்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் திட்டத்துக்கு, வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரிக்கு வருகிற மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி கோரி இந்திய தேர்தல் ஆணையம், மத்திய சட்டத்துறைக்கு கடிதம் எழுதி இருந்தது. மேலும் வெளியுறவுத் துறையின் ஒப்புதலும் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள வெளியுறவு அமைச்சகம், மின்னணு பரிமாற்ற தபால் வாக்கு முறையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

எனினும் இதுதொடர்பாக அனைத்துத் துறையினரிடம் விரிவான ஆலோசனை நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 1.17 லட்சம் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள சூழலில், வரவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் - கோழி, வாத்துகளை கொண்டு வர தடை

இதன்மூலம் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், இ-தபால் மூலம், தாய்நாட்டில் உள்ள தங்களது சொந்த தொகுதிகளில் வாக்களிக்க முடியும்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: TN Assembly Election 2021, Voters list