கரூர் மாவட்டத்தில் ஐடி பார்க் அமைப்பதற்கான வேண்டுகோள் முதல்வரிடம் வைக்கப்படும் எனவும், மேடின் கரூர் என்று உலகளவில் பேசும் அளவிற்கு நாம் செயல்பட வேண்டும் என கரூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறையினருக்கான வேலைவாய்ப்பு திருக்காம்புலியூர் பகுதியில் அமைந்துள்ளன தனியார் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் முகாமினை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு துவக்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு விண்ணப்ப படிவங்களை வழங்கினார். தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் ஐம்பது இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.
காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்ற முகாமில் எட்டாம் வகுப்பு முதல் அனைத்து உயர் படிப்புகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் பங்குபெறும் இம்முகாமில் 100 நிறுவனங்களில் உள்ள 5000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : ஃபாக்ஸ்கான் பெண் ஊழியர்கள் இறந்ததாக வதந்தி பரப்பிய சேலம் வளர்மதி கைது
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகத்தில் வேலையின்மையை உருவாக்கும் நோக்கோடு முதல்வரின் முயற்சியால் பல்வேறு நிறுவனங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். கரூர் மாவட்டத்தில் புதிய ஐடி பார்க் அமைப்பதற்கான வேண்டுகோள் முதல்வரிடத்தில் வைக்கப்படும். இதன் மூலமாக கரூர் மாவட்டத்தில் படித்து வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் சொந்த மாவட்டத்திலேயே ஐடி துறையில் பணிபுரியும் வாய்ப்பை முதல்வர் ஏற்படுத்தித் தருவார்கள்.
இதையும் படிங்க : கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் இலங்கை கடற்படையால் கைது
ஜவுளி நகரமான கரூரில் 10 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டிற்குள் அதை 25 ஆயிரம் கோடியாக உயர்த்தும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதற்காக 200 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் பூங்கா அமைப்பதற்கான ஆணையினை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார். Made in china என்பதை, Made in india என்று கூறினோம். Made in Tamilnadu என்று மாற்றுவதற்கான முயற்சியில் முதல்வர் ஈடுபட்டுள்ளார். Made in Karur என்று உலகம் முழுவதும் பேசும் அளவுக்கு நாம் செயல்பட வேண்டும் என்று பேசினார்.
செய்தியாளர் : தி.கார்த்திகேயன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.