தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாத்தில் பேசிய முன்னாள்
அதிமுக அமைச்சர் தங்கமணி, நிர்வாகத்தில் உள்ள தவறுகளால் மின் வெட்டு ஏற்படுவதாகவும், முன்பு அணிலால் மின் வெட்டு ஏற்பட்டதாக தெரிவித்த அமைச்சர் இப்போது நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படுவதாக கூறுவதை எப்படி எடுத்துக்கொள்வது என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக ஆட்சி அமைந்தவுடன் மின் வெட்டு என்ற மாய தோற்றத்தை உருவாக்குவதாகவும், இரண்டு நாட்களின் மின் வெட்டு சரி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், கடந்த ஆட்சியில் 2018-ல் 59 மணி நேரம் 58 நிமிடங்களும், 2019-ல் 39 மணி நேரம் 20 நிமிடங்களும், 2020ல் 32மணி நேரம் 80 நிமிடங்களும், 2021ல் தொடர் மின் வெட்டு இருந்ததாகவும் சுட்டிக்காட்டினார். அதேப் போல, 2018ல் நுகர்வோர் பற்றாக்குறை 76.91 மில்லியன் யூனிட் இருந்தாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Also Read : ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை சிக்கலுக்கு மாற்று முறையை அறிவித்த அமைச்சர் சக்கரபாணி
முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் மின் வெட்டு, மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், கடந்த காலங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்..
இரவில் கனவு கண்டாலும், பகல் கனவு கண்டாலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சியில் மின்வெட்டு இருக்காது என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் மின் உற்பத்தியை இரட்டிப்பாக உயர்த்த வழிகாட்டு நெறிமுறை முதலமைச்சர் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உறுதியளித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.