கடந்த மே மாதம் 7ஆம் தேதி தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற அன்றே நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த வகையில், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினை செயலாக்கும் வகையில், தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதன்படி கடந்த மே மாதம் 8ம் தேதி முதல் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.பெண்களை தொடர்ந்து திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களும் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார். மேலும், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நகரப் பேருந்துகளில் பயணிக்க வழங்க கட்டணமில்லா பேருந்து சீட்டு அச்சிடப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 12ஆம் தேதி முதல் தற்போது வரை அரசு மாநகர பேருந்துகளில் 78 லட்ச மகளிர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
Read More : பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா? - அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்
மேலும் அவர் கூறுகையில், “கடந்த 12-ஆம் தேதி முதல் பயணம் செய்யும் பெண்களுக்கு டிகெட் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்த பயணம் செய்பவர்களில் 56% பெண்கள்தான். நேற்று மட்டும் 28 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். 7,222 நகரப் பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படுகிறன.
திருநெல்வேலியில் 68% பெண்கள் பயணம் பேற்கொள்வதாக தகவல். நேற்று செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி எண்ணும் கிராமத்தில் பேருந்துகள் இயக்க முதலமைச்சருக்குக் கோரிக்கை வந்ததன் அடிப்படையில் மதியத்திலிருந்தே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறன.
Must Read : நூறு வயது காணும் மூத்த தோழர் சங்கரய்யா அவர்களைப் போற்றுவோம் - மு.க. ஸ்டாலின்
புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்க ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரை 364 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அரசு பேருந்துகளில் 5,741 திருநங்கைகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். நிருபையா திட்டத்தின் கீழ் சென்னையில் 2,500 பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருவகிறது விரைவில் நடைமுறைக்கும் வரும்” இவ்வாறு அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.