சீனா, பிலிப்பைன்ஸில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு தமிழகத்தில் இன்டர்ன்ஷப் பெறுவதில் சிக்கல்: அமைச்சர் மா.சுப்பிரமணியம்
சீனா, பிலிப்பைன்ஸில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு தமிழகத்தில் இன்டர்ன்ஷப் பெறுவதில் சிக்கல்: அமைச்சர் மா.சுப்பிரமணியம்
மா.சுப்பிரமணியன்
ஒன்றிய அரசு கடந்த நவம்பர் மாதம் வெளிநாடுகளில் படித்த மாணவர்கள் இங்கே மருத்துவக் கல்லூரிகளில் இன்டர்ன்ஷிப் பெறுவதை 10 சதவீதத்திலிருந்து 7 .5 சதவீதமாக குறைந்துள்ளது.
சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் படித்த மருத்துவ மாணவர்கள் தமிழகத்தில் மருத்துவ கல்லூரியில் இன்டர்ன்ஷிப் பெறுவதில் சிக்கல் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளி நாடுகளில் படித்த மருத்துவ மாணவர்கள் இன்டர்ன்ஷிப் பெறுவதில் சிக்கல்கள் இருப்பதாகவும், அவர்கள் ஆறு மாத காலம் ஆன்லைனில் படித்ததால் உச்ச நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்துள்ளது என்றும் தெரிவித்தார்.
இருந்தபோதும் மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் வெளிநாடுகளில் படித்த மாணவர்கள் இங்கே மருத்துவக் கல்லூரிகளில் இன்டர்ன்ஷிப் பெறுவதை 10 சதவீதத்திலிருந்து 7 .5 சதவீதமாக குறைந்துள்ளது.
தமிழக முதல்வர் 20% ஆக உயர்த்துவதற்கும், ஆன்லைனில் வெளிநாட்டில் படித்த மாணவர்கள் இன்டர்ன்ஷிப் பெறுவதற்கும் உரிய நடவடிக்கையை கண்டிப்பாக எடுப்பார் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.