பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை. பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் உலக செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘குழந்தைகளின் திறமையை கண்டறியும் பணி பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உண்டு.
பெற்றோர்கள் குழந்தைகளை ஒப்பிடாதீர்கள் என்றார். மேலும் 5 ஆம் தேதி பொது தேர்வு எழுத கூடிய மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை. விருப்பம் உள்ளவர்கள் அணிய வேண்டும் என்று தான் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற செய்தி கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் ஆரம்பிக்கும் பொழுது வந்த வழிகாட்டுதலாகும்.
தற்போதைய புதிய வழிகாட்டுதலில் தனிமனித விருப்பத்தின்படி பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணிய வேண்டும் என்றுதான் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். அரசு அமைத்த பிறகு முதல்முறையாக தேர்வு நடத்துகிறோம். கத்திரிவெயில் உள்ளநிலையில் மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நிறைய பள்ளி குழந்தைகள் ஆல் பாஸ் செய்யுங்கள் என கேட்கும் போது கூட, நான் ஆல்பாஸ் போட முடியாது என்றுதான் சொல்லுவேன். கட்டாயம் தேர்வு தான் என் நிலைபாடு. மாணவர்கள் நலன் கருத்தி தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றாமல் மாநிலக் கல்வி கொள்கை உருவாக்குவதில் பலனில்லை- மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்
ஒற்றை ஆசிரியர் உள்ள பள்ளியை தமிழகத்தில் மூட அரசு விரும்பவில்லை. எனவே ஒரு மாணவர் படித்தாலும் பள்ளி இயங்கும் என்றார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார். தொடக்கப்பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடைவிடுமுறை அளிப்பது குறித்து நாளை முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.