மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாளையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்தும், மலர்த்தூவியும் மரியாதை செலுத்தினார். இதையடுத்து, அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து அதிமுகவினர் சார்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதனையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார். இதையடுத்து, ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் உறுதிமொழி ஏற்றனர். பின்னர், நியூஸ் 18 தமிழ்நாடுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பெயர் சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு அனுப்பியுள்ள நோட்டீஸ் டம்மி நோட்டீஸ் என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.