சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை எட்டயபுரத்தில்14 சென்டி மீட்டர், கொடைக்கானலில் 13 சென்டி மீட்டர் மழை பெய்ததாகவும் புவியரசன் தெரிவித்தார்.
அக்டோபர் ஒன்று முதல் இன்று வரை தமிழகம் முழுவதும் 84 மில்லி மீட்டர் மழை கிடைத்திருக்க வேண்டிய நிலையில் 75 மில்லி மீட்டர் கிடைத்துள்ளதாகவும், சென்னைக்கு 93 மில்லி மீட்டர் கிடைத்திருக்க வேண்டிய நிலையில் 75 மில்லிமீட்டர் மட்டுமே கிடைத்துள்ளதாகவும் புவியரசன் கூறினார். அத்துடன், தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும் புவியரசன் தெரிவித்தார்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.