மாண்டஸ் புயல் புதுச்சேரி -ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை சென்னை அருகே உள்ள மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் மற்றும் கனமழை காரணமாக தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், டார்ச் அல்லது மெழுகுவர்த்திகள், பேட்டரிகள், குழந்தைகளுக்கான அத்தியாவசிய தேவைகள் மற்றும் உணவு பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பெரியோர்களுக்கு மருந்து உள்ளிட்டவை வாங்கி வைத்திருக்க வேண்டும். மேலும் உலர் பழங்கள் மற்றும் குடிநீர் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
மேலும் புயல் கரையை கடக்கும்போது பலத்த காற்று வீசும் என்பதால் அப்போழுது மின் தடை ஏற்படும், டார்ச் லைட், பவர் பேங்க், மெழுகுவர்த்தி, இன்வர்ட்டர் போன்றவற்றை தயார் செய்து வைத்துக்கொள்வது பாதுகாப்பானது. மின்சாரம் இருக்கும்போதே செல்போன்கள் மற்றும் பவர் பேங்க் உள்ளிட்டவையை சார்ஜ் செய்து வைத்து கொள்ளவும். உங்களது செல்போன்களை சார்ஜ் செய்துகொண்டு வைத்திருந்தால் ஏதேனும் அபாயம் ஏற்படும் சமயத்தில் அரசு அறிவித்துள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து உதவியை தேடி கொள்ளலாம்.
இதையும் படிங்க: கரையை நெருங்கும் மாண்டஸ் புயல்.. ரெட் அலெர்ட்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?
மேலும் அவசர உதவி மற்றும் இடர் ஏற்பட்டால், காவல்துறை அவசர உதவி எண் 100 அல்லது 112, தீயணைப்பு மற்றும் மீட்பு குழு அவசர உதவி எண்.101 அல்லது 112 ஆகியவற்றில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம். மேலும் சமூக ஊடகங்களில் வரும் அனைத்து தகவல்களையும் நம்பி விடாமல், போலிச் செய்திகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyclone Mandous, Local News, Tamil News