மதுரையில் விளிம்பு நிலை மக்களுக்கு உணவு தரும் திட்டத்துக்கு, நடிகர் சூர்யா ஐந்து லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்ததற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
எம்.பி. சு.வெங்கடேசன் முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட அன்னவாசல் திட்டம் மூலம், ஆதரவற்ற மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று மதிய உணவு வழங்கப்படுகிறது. முதலில் 3000 பேருக்கு உணவு வழங்கிய இத்திட்டத்தில் தற்போது 4,500 பேருக்கு முட்டையுடன் மதியவுணவு வழங்கப்படுகிறது. அன்னவாசல் திட்டத்திற்காக நடிகர் சூர்யா 5 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளார். இதற்கு நன்றி கூறியுள்ள எம்.பி. சு.வெங்கடேசன், "ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்" என்பது வள்ளுவன் மொழி. 'அகரம்' மூலம் ஏழை மக்களின் கல்விப் பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா. இப்போது 'ஆகாரம்' மூலம் அன்னவாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதரின் பசியாற்றவும் முன்வந்துள்ளார்.
நல்ல முன்னெடுப்புக்கள் பல நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே நகரும். அப்படியான நகர்வில், தன் பங்களிப்பாக 5 இலட்ச ரூபாயை நன்கொடையாக அன்னவாசலில் சோறூட்ட அளித்து மகிழ்ந்திருக்கின்றார் திரைக்கலைஞர் சூர்யா. அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.