திருமங்கலத்தில் மூத்த மகன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தாய் தனது இளைய மகனுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 46). இவருடைய மனைவி பஞ்சவர்ணம் (வயது 40). இவர்களுக்கு விக்னேஷ்(வயது 23), மணி(வயது 19) என இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கோவிந்தராஜ் ஈரோடு பகுதியில் கம்பி கட்டும் வேலை பார்த்து வருகிறார். விக்னேஷ் ITI படித்துள்ளார். விக்னேஷின் தாய் பஞ்சவர்ணம் சகோதரன் மணி இருவரும் இப்பகுதியிலுள்ள செங்கல் காளவாசலில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை தாய் பஞ்சவர்ணம், மகன் மணி இருவரும் வேலை முடித்து வீட்டிற்கு வந்து பார்த்த போது மூத்த மகன் விக்னேஷ் வீட்டினுள்ளே தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தாயும், இளைய மகனுடன் கதவைை பூட்டிக் கொண்டு இருவரும் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற அக்கம் பக்கத்தினர் கதவைை உடைத்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடக்கோவில் போலீசார் விக்னேஷ் எதற்காக இறந்தார் தாய் பஞ்சவர்ணம், இளையமகன் மணி ஆகிய இருவரும் ஏன் தற்கொலைக்கு முயன்றனர். என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூத்த மகன் தற்கொலையால் தாயும் இளைய மகனும் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கொம்பாடி பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : சிவக்குமார் (மதுரை)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.