முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Ramzan: உலக அமைதி, கொரோனா தொற்று நீங்க வேண்டி மதுரையில் சிறப்பு தொழுகை

Ramzan: உலக அமைதி, கொரோனா தொற்று நீங்க வேண்டி மதுரையில் சிறப்பு தொழுகை

மதுரையில் சிறப்பு தொழுகை

மதுரையில் சிறப்பு தொழுகை

Ramzan 2022 : ரமலான் பண்டிகை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்

  • Last Updated :

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாத நோன்பாகும். அதனடிப்படையில் ரமலான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பினை கடைபிடிப்பார்கள். ரமலான் மாதம் முதல்நாள் தொடங்கி தொடர்ச்சியாக 30நாட்களும்  நோன்பினை கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள் மற்றொரு கடமையான ஏழை எளியோருக்கு ஜகாத் என்னும் உதவிகளை வழங்கிவருவார்கள்.

ரமலான் 30 நாள் நோன்பு முடிவடைந்த பின்னர் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரமலான் பண்டிகையாக கொண்டாடுவர். இதற்காக அதிகாலையில் தொழுகை முடித்த பின்னர் புத்தாடை அணிந்து ஈதுல் பித்ர் என்னும் பெருநாள் சிறப்பு தொழுகையில் கலந்துகொள்வர்.

பெருநாள் சிறப்பு தொழுகையை திறந்தவெளி திடல்களில் தொழுவது கூடுதல் சிறப்பு என்பதால் பல்வேறு பகுதிகளில் திடல்களிலும், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெறும். தொழுகைக்கு செல்வதற்கு  முன்பாக ஏதாவது ஒரு ஏழைக்கு உதவி செய்யவேண்டும் அடிப்படையில் பத்து என்னும் உதவியை வழங்கிவிட்டு தொழுகையில் ஈடுபடுவர்.

அதனடிப்படையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் மகபூப்பாளையத்தில் திறந்தவெளி மைதானத்தில் காலை 7 மணிக்கு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இதில் பெரும்திரளான குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு இஸ்லாமிய பெருமக்களும் கலந்துகொண்டு பிராத்தனையில் ஈடுபட்டனர்.

Must Read : Ramzan 2022 | ரம்ஜான் பண்டிகையின் சிறப்புகளும் முக்கியத்துவமும்...

top videos

    பெருநாள் தொழுகை முடிந்து இஸ்லாமியர்கள் ஒருவொருக்கொருவர் கைகொடுத்தும், ஆரத்தழுவியும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். சிறப்பு தொழுகையின் முடிவில்  உலக அமைதிபெற வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், கொரோனா தொற்று போன்ற பேரிடர்கள் நீங்க வேண்டும் சிறப்பு பிராத்தனை செய்தனர்.

    First published:

    Tags: Eid Mubarak, Ramzan