முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக-வில் தலைமையே கிடையாது - பகீர் கிளப்பும் செல்லூர் ராஜூ..

அதிமுக-வில் தலைமையே கிடையாது - பகீர் கிளப்பும் செல்லூர் ராஜூ..

செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ

ADMK Sellur Raju: அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து பேசி முடிவு எடுப்போம். அதிமுக வாக்கு வங்கி குறையவில்லை - செல்லூர் ராஜூ

  • Last Updated :

அதிமுகவில் தலைமையே கிடையாது என்றும், பண பலம் மற்றும் அதிகார பலம் தான் திமுக வெற்றிக்கு காரணம் எனவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கே.கே.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர் சந்தித்தவர், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பண பலம், கூட்டணி பலம், அதிகார பலம் தான் திமுக வென்றதற்கு காரணம்.

Also Read: சிவகங்கையில் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக, சுயேட்சை கவுன்சிலர்கள்!!

ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக அதிமுக தனித்து களம் கண்டது. அதிமுக-வில் தலைமையே கிடையாது. இப்போது இருப்பவர்களை, கட்சியை வழிநடத்த நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம். அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து பேசி முடிவு எடுப்போம். அதிமுக வாக்கு வங்கி குறையவில்லை. வாக்களிக்க வேண்டிய மக்கள் வாக்களிக்க வரவில்லை. திமுக ஆட்சி மீது உள்ள விரக்தியில் மக்கள் முழுமையாக வாக்களிக்கவில்லை.

Also Read: செக் மோசடி வழக்கில் திமுக எம்.எல்.ஏவுக்கு பிடிவாரண்ட்.. 4வது முறையாக சம்மனுக்கு ஆஜராகாததால் நீதிமன்றம் அதிரடி..

top videos

    அதிமுக - திமுகவில் இணைந்துவிடும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. திமுக தான் அதிமுகவில் இணையும். பாஜக மூன்றாவது பெரிய கட்சி என அண்ணாமலை சொல்வதற்கு காரணம், அது எப்போதும் வளரும் கட்சி தான், அவர்கள் அப்படி தான் சொல்வார்கள்.தமிழகத்தில் என்றுமே திமுக, அதிமுக தான் ஆட்சி செய்யும். மாற்று கட்சியினர் யாராலும் ஆள முடியாது.” என்றார்.

    First published:

    Tags: ADMK, BJP, DMK, Sellur K. Raju, Sellur Raju Speech, Tamilnadu