மீனாட்சியம்மன் கோவில் யானையின் மன அழுத்ததை குறைக்க பிரத்தியேக குளியல் தொட்டி
மீனாட்சியம்மன் கோவில் யானையின் மன அழுத்ததை குறைக்க பிரத்தியேக குளியல் தொட்டி
கோவில் யானை
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கோவில் யானை பார்வதிக்கு கண்ணில் வெண்புரை ஏற்பட்டு பார்வை குறைபாடு ஏற்பட்டு வந்தது. இதற்காக கால்நடை மருத்துவ நிபுணர்கள் குழு சிறப்பு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டது.
மீனாட்சியம்மன் கோவில் யானையின் மன அழுத்ததை குறைக்கும் வகையில் பிரத்தியேக குளியல் தொட்டி அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கோவில் யானை பார்வதிக்கு கண்ணில் வெண்புரை ஏற்பட்டு பார்வை குறைபாடு ஏற்பட்டு வந்தது. இதற்காக கால்நடை மருத்துவ நிபுணர்கள் குழு சிறப்பு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டது.
இதனால் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து யானையின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக குளித்து விளையாடும் வகையில் குளியல் தொட்டி அமைக்க அறநிலையத்துறை பரிந்துரையின் பேரில் மீனாட்சியம்மன் கோயில் யானை பார்வதிக்கு சிறப்பு குளியல் தொட்டி அமைக்க பல்வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன.
இதைத்தொடர்ந்து கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யானை பராமரிக்கப்பட்டு வரும் யானை மஹால் பகுதியில் குளியல் தொட்டி அமைப்பது என முடிவு எடுக்கப்பட்டு இதற்காக 23.50 லட்சமும் ஒதுக்கப்பட்டு குளியல் தொட்டி அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், வரவிருக்கும் அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கும் பொருட்டு பார்வதி யானையின் உடல் உஷ்ணத்தை குறைத்து மன அழுத்தத்தை போக்கும் வகையில், குளியல் தொட்டி அமைக்கும் பணி விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.