சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் 19-ல் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் போலீஸ் சித்தரவதைக்கு ஆளாகி உயிரிழந்தனர். இதையடுத்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 10 பேரை CBI போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் குற்றவாளிகள் அனைவரும் காவல் துறையை சேர்ந்தவர்கள் என்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் வழக்கு விசாரணையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார். இதனை தொடர்ந்து சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு விசாரணையை கீழமை நீதிமன்றம் 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மேலும் படிக்க...சேலத்தில் போலி நிறுவனம் நடத்தி 100 கோடி ரூபாய் மோசடி
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madhurai high court, Sathankulam