மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, மீனவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து 6 சட்டமன்ற தொகுதிகளையும், 3 நாடாளுமன்ற தொகுதிகளையும் ஒதுக்குவது குறித்து 6 மாதங்களில் பரிசீலிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாகத்தில் எந்த பிரதிநித்துவமும் இல்லாத மீனவர்களை, மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து 6 சட்டமன்ற தொகுதிகளையும், 3 நாடாளுமன்ற தொகுதிகளையும் ஒதுக்கீடு செய்ய கோரி மீனவர்கள் பாதுகாப்பு சங்க தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மீனவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என 1980-ல் மண்டல் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
இந்த பரிந்துரைப்படி அவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்து, அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து தனி தொகுதிகளை உருவாக்க வேண்டும் என மனுதரார் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், மீனவ சமுதாயத்தினருக்கு 6 சட்டமன்ற தொகுதிகளையும், 3 நாடாளுமன்ற தொகுதிகளையும் மீனவர்களுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் மனுதரர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக மனுதாரர் அளித்த மனுவை ஆறு மாதங்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் என தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
Published by:Veeramani Panneerselvam
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.