தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை, சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசும்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. உடனடியாக ஜாமினில் விடுவிக்கப்பட்ட அவர், தண்டனையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, இந்தியாவின் ஒருமைப்பாடு பாதிக்காத வகையில், சிந்தித்து கருத்துக் கூற வேண்டும் என வைகோவுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை, விசாரணை முடியும் வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்த நீதிபதி, வைகோவின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக, சென்னை ஆயிரம் விளக்கு காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டார்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.