முகப்பு /செய்தி /தமிழ்நாடு / புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ- பா.ஜ.க நிர்வாகிக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ- பா.ஜ.க நிர்வாகிக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

பிரசாந்த் குமார் உம்ராவ்

பிரசாந்த் குமார் உம்ராவ்

புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ பரப்பிய பா.ஜ.க நிர்வாகிக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பாஜக நிர்வாகியின் ட்விட்டர் பதிவு கடுமையான செயல் என மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி கொல்லப்படுவதாக போலி வீடியோக்கள் பதிவிட்டு வதந்தி பரப்பியதாக, உத்தரப் பிரதேச பா.ஜ.க செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி பிரசாந்த் உம்ராவ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். 12 வாரங்கள் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தார். வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற 12 வாரம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தைத் தொடர்ந்து ஜாமீன் வாங்கிக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.

எனவே, முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பிரசாந்த் குமார் உம்ராவ் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த வீடியோக்களை தான் உருவாக்கவில்லை என்றும், அதனை Forward மட்டுமே செய்ததாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில், மனுதாரர் பதிவிட்ட வீடியோ பதிவை சுமார் 5 லட்சம் பேர் பார்த்ததாகவும், இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, மனுதாரரின் செயல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியதாகவும், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் உயிருக்கும், உடமைக்கும் பெரும் ஆபத்து ஏற்படும் நிலை உருவானதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

விரைவில் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை - அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன சேதி

மனுதாரரின் போலி பதிவு கடுமையான செயலாக பார்க்கப்படுகிறது என கூறிய நீதிபதி, மனு மீது தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 17 ஆம் தேதி ஒத்தி வைத்தார்.

First published:

Tags: BJP, Migrant Workers