கல்விக் கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு எப்படி ஊதியம் வழங்க முடியும்..? உயர் நீதிமன்றம் கேள்வி
கல்வி கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகள் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கோப்புப் படம்
- News18 Tamil
- Last Updated: June 23, 2020, 1:11 PM IST
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதேசமயம், ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
அந்த மனுக்களில், பள்ளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால் தான் பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் இயங்காவிட்டாலும், அங்கு பணியாற்றும் அனைவருக்கும் தனியார் பள்ளிகள் சம்பளம் வழங்கி வருவதாகவும், தற்போது கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதித்தால்தான் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்த போது, பேரிடர் மேலாண்மைக்காக மட்டுமே பேரிடர் மேலாண்மை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அந்த சட்டத்தின் கீழ் கட்டணம் வசூலிக்க தடை விதித்தது தவறு எனவும், நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.Also read... அமைச்சர் கே.சி வீரமணிக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
இதையடுத்து, கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும்? ஆன் லைன் மூலம் வகுப்புக்களை நடத்தும்படி ஆசிரியர்களை வற்புறுத்தும் போது அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த வழக்குகள் தொடர்பாக, ஜூன் 30ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் இயங்காவிட்டாலும், அங்கு பணியாற்றும் அனைவருக்கும் தனியார் பள்ளிகள் சம்பளம் வழங்கி வருவதாகவும், தற்போது கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதித்தால்தான் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்த போது, பேரிடர் மேலாண்மைக்காக மட்டுமே பேரிடர் மேலாண்மை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அந்த சட்டத்தின் கீழ் கட்டணம் வசூலிக்க தடை விதித்தது தவறு எனவும், நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.Also read... அமைச்சர் கே.சி வீரமணிக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
இதையடுத்து, கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும்? ஆன் லைன் மூலம் வகுப்புக்களை நடத்தும்படி ஆசிரியர்களை வற்புறுத்தும் போது அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த வழக்குகள் தொடர்பாக, ஜூன் 30ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.