தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் விரைவில் மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழக சட்டப்பேரயில் தெரிவித்துள்ளார்.
சட்டமனற் வினா-விடை பகுதியில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் மு.பன்னீர்செல்வம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி துவங்க அரசு முன் வருமா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலிளித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் எதிர்காலத்தில் படிப்படியாக மருத்துவ கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், மருத்துவ கல்லூரி துவங்க கட்டுமானம் என்பது 300கோடி முதல் 400 கோடி செலாவாகும், மருத்துவ கல்லூரியை மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிர்காலத்தில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தமிழ்நாட்டில் நெசவு தொழில் பிரபலமாக உள்ள தொகுதியாக சங்கரன் கோவில் உள்ளது. 25,000 தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர். எனவே சங்கரன் கோயில் தொகுதியில் ஜவுளிப் பூங்கா அமைக்க அரசு ஆவன செய்யுமா? என கேள்வி எழுப்பினார்.
Read More : மதுப்பிரியர்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் 4 நாள்கள் டாஸ்மாக் கடை மூடல்
இதற்கு பதிலளித்து பேசிய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, மதுரை, கரூர், நாமக்கல், திருப்பூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா செயல்பட்டு வருகிறது.
Must Read : செங்கல்பட்டு இரட்டைக் கொலையில் தொடர்புடைய இருவர் போலீசாரால் சுட்டுக் கொலை
இதனால் சங்கரன் கோவில் அமைக்கும் கோரிக்கை எழவில்லை. சங்கரன்கோவில் தொகுதியில் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ma subramanian, Medical College, MK Stalin, TN Assembly