பிரபாகரன் உயிரோடு இருப்பதாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். பல அரசியல் தலைவர்களும் இவரின் இந்த பேட்டிக்கு பின்னர் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இதுதொடர்பான விவாதங்களும் அரங்கேறியது.
இந்நிலையில் மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் இலங்கை தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. அவர் உயிருடன் இருக்கிறார் என்ற ஆதாரத்தை நாங்கள் வெளியிட விரும்பினால் உங்களை அழைத்தே நாங்கள் கூறுவோம் என தெரிவித்தார்.
Announcement that Prabhakaran is alive has given new hope & enthusiasm to all Sri Lankan Tamils...If we want to reveal the proof that he's alive, I'll call you & reveal the proof. As soon as I get the evidence, I will meet the media and release it: Tamil activist Pazha Nedumaran pic.twitter.com/O1dLLczxdX
— ANI (@ANI) March 4, 2023
மேலும் எனக்கு அதுகுறித்த ஆதாரம் கிடைத்தால் நிச்சயம் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அதை வெளியிடுவேன் என பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என கடந்த மாதம் 13ஆம் தேதி பழ.நெடுமாறன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: LTTE, Pazha Nedumaran, Srilankan Tamil