அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கும்: வானிலை மையம் தகவல்
அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கும்: வானிலை மையம் தகவல்
கோப்புப் படம்
மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இந்தப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை துவங்கும்.
அதன் பின்னர் படிப்படியாக கேரளா மற்றும் கர்நாடகாவில் வடகிழக்குப் பருவமழை துவங்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூர், மகாபலிபுரத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை இடைவெளிவிட்டு மிதமான மழை பெய்யக்கூடும். இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்றார் பாலச்சந்திரன்.
Also watch
Published by:DS Gopinath
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.