தென்கிழக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 8ஆம் தேதி மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், தமிழகத்தில் தற்போது தான் மழை ஓய்ந்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் உருவாகும் ஒரு காற்றழுத்த பகுதியால் தமிழகத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பெருங்கடல், தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடலில் ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து இன்று மேலும் வலுவடையும் என தெரிவித்துள்ளது.
மேலும் அது படிப்படியாக மேற்கு நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் வரை தீவிர நிலையிலேயே இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று கன மழை பெய்யயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வருகின்ற 19ஆம் தேதி தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதனால் கடலூர் மீனவர்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டம என மாவட்ட மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heavy rain, MET warning, Tamilnadu, Weather News in Tamil