முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் மீண்டும் வெளுக்கபோகும் மழை: வங்க கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

தமிழகத்தில் மீண்டும் வெளுக்கபோகும் மழை: வங்க கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

மாதிரி படம்

மாதிரி படம்

சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்கள் மழைக்கு வாய்ப்பு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் கடந்த வாரம் கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பலான மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. புயல் கரையை கடந்தும் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் சென்னையில் இருந்து தென்கிழக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகும் நிலையில் நாளை மறுநாள் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்கள் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று வளிமண்டல சுழற்சியின் உருவாகியுள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடலோர பகுதிகளை நெருங்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதையும் படிங்க: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து.. மூன்று முக்கிய கோப்புகள் என்னென்ன தெரியுமா?

 அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்த்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் 30 செ.மீ. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 16 செ.மீ. அரியலூர் மாவட்டம் திருமானூரில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Bay of Bengal, Mansoon Rain, Tamilnadu