முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "தன்னை விஷவாயு என விமர்சித்து விவசாயிகளை ஸ்டாலின் கொச்சைப்படுத்துகிறார் - எடப்பாடி பழனிசாமி

"தன்னை விஷவாயு என விமர்சித்து விவசாயிகளை ஸ்டாலின் கொச்சைப்படுத்துகிறார் - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கும் என்றும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று முதல்வர் கூறினார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் விவசாயிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தர்மபுரி மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ், பாப்பிரெட்டிபட்டி மற்றும் அரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர்,  மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கும் என்றும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றும் கூறினார்.

திமுக-வின் மக்களவைத் தேர்தல் அறிக்கை, மாநில அளவிலான தேர்தல் அறிக்கையாக அமைந்திருப்பதாகவும், மக்களை திசை திருப்பி வாக்குகளைப் பெற திமுக முயற்சி செய்துவருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் இனி ஒரு சொட்டு நீர் கூட வீணாகாத வகையில் நீர் மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்தார். தன்னை விஷவாயு என்று விமர்சித்து, விவசாயிகளை மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.

Also see... பொன்.ராதாகிருஷ்ணன் தூது அனுப்பினாரா? இல்லையா? - தினகரன் 

Also See... பதற்றமான வாக்குச்சாவடிகள் எத்தனை? தமிழகத் தேர்தல் அதிகாரி விளக்கம்

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: CM Edappadi Palaniswami, Dharmapuri S22p10, Election 2019, EPS, Lok Sabha Election 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019