தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் டி.டி வி. தினகரன் தலைமையில்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிடும். வேட்பாளர்களின் தேர்வு ஏற்கனவே நடை பெற்றுவிட்டதாகவும் முடிவுகள் இறுதி செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
ஒமைக்ரான் பரவல் நேரத்தில் ஆளுங்கட்சி ஆனது தேர்தலை நடத்துகிறது. ஒமிகிறான் பரவல் தேர்தல் காரணமாக அதிகரிக்குமோ என்ற அச்சம் உண்டாகிறது. நோய்த்தொற்று காலத்தில் தேர்தலை நடத்துவது ஆளுங்கட்சியின் இயலாமை. ஆறு மாதம் கழித்து இப்போதுதான் தெரிகிறது திமுகவின் உண்மை முகம். அதற்கு பொங்கள் தொகுப்பு உதாரணமாக அமையும்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தோற்று இருந்தாலும் மீண்டும் மீண்டும் போட்டியிடுவோம். தேர்தல் என்பது ஜனநாயக போர்க்களம். தோல்வி அடைந்தால் வீட்டில் படுத்து தூங்க முடியாது. கடைசி மூச்சு வரை போராடுவோம். அரசியல் வியாபாரம் இல்லை.
Also Read : நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் களமிறங்கும் விஜய் மக்கள் மன்றம்; சத்தமில்லாமல் காய்நகர்த்தும் தலைமை
அதிமுக குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து சரியானது. பேசிய வார்த்தைகள் தவறானது என்றார். அதிமுகவினர் தைரியம் இல்லாமல் இருக்கிறார்கள் அதை குழந்தையை கேட்டாலும் சொல்லும். அதைதான் நயினார் நாகேந்திரன் சொல்லியுள்ளார்.
அரியலூர் மாணவி விவகாரத்தில் மாணவியின் அடையாளங்களை பயன்படுத்தியது சட்டப்படி தவறு எனில் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கலாம். கவிஞர் வைரமுத்துவின் கவிதை "பட்டு வேட்டிகாக கனவு கண்டிருந்த போது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது" என்பது திமுகவின் ஆட்சிக்கு பொருந்தும் என்றும் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.