ரேவ் பார்ட்டி.. நடன அழகிகள் நிர்வாண நடனம்.. போதை சப்ளை - தனியார் ரிசார்டில் ஆட்டம் போட்ட கும்பல்
ரேவ் பார்ட்டி.. நடன அழகிகள் நிர்வாண நடனம்.. போதை சப்ளை - தனியார் ரிசார்டில் ஆட்டம் போட்ட கும்பல்
தமிழக - கர்நாடக எல்லையில் இரவில் தனியார் ரிசார்ட்டில் போதைப்பொருள்களை பயன்படுத்தி ஆபாச நடன நிகழ்ச்சி நடத்திய விவகாரத்தில் 2 பெண்கள் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகா தமிழக எல்லைப்பகுதியில் பெங்களூரு நகரில் உள்ள ஆனெக்கல் என்ற இடத்தில் தனியார் ரிசார்ட்டில் நேற்று இரவு நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் ( ரேவ் பார்ட்டி) போதைப்பொருள்கள் பயன்படுத்தி ஆபாச நடனம் ஆடிய 35 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தப்பியோடியவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
கர்நாடக மாநில எல்லையான ஆனெக்கல் அடுத்துள்ள தனியார் ரிசார்ட்டில் நேற்று இரவு இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நடன நிகழ்ச்சியில் பெங்களுரு பகுதியில் வேலைபார்த்து வரும் ஐடி கம்பெனி பணியாளர்கள், மாணவர்கள், பெண்கள் என 40 பேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் இரவில் மது மற்றும் போதைப்பொருள்களை பயன்படுத்தி ஆபாச நடனம் ஆடியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆனெக்கல் காவல்துறையினருக்கு ரகசிய கிடைத்துள்ளது. தொடர்ந்து அந்த தனியார் ரிசார்ட்டிற்கு சென்ற போலீஸார் அங்கு நடனமாடி கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கிருந்த பெரும்பாலானோர் தப்பியோடியுள்ளனர். இதில் இரண்டு பெண்கள் உள்பட 35 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து 35 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் இவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு ஆன்லைன் செயலியான ஹை ஆப்(highapp.com) என்ற செயலி மூலம் முன்பதிவு செய்து வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த ரேவ் பார்ட்டியில் நடன அழகிகள் நிர்வாணமாகவும் நடனம் ஆடியுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.மேலும் இவர்கள் அனைவரும் போதை பொருட்கள் மற்றும் மது பயன்படுத்தியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த நிலையில் இந்த ரேவ் பார்ட்டியில் கலந்து கொண்ட 2 பெண்கள் உட்பட 35 பேரை போலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் 40 பேர் கலந்து கொண்ட இந்த ரேவ் பார்டி நிகழ்ச்சியில் 35 பேர் மட்டுமே கைது செய்துள்ள நிலையில் மேலும் இந்த ஆபாச நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தப்பியோடிய மற்றவர்களையும் போலீஸார் வலைவீசி தேடிவருகின்றனர். அவர்கள் பயயன்படுத்திய மதுபான பாட்டில்கள் மற்றும் போதைப்பொருள்கள் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக - கர்நாடக எல்லை பகுதியில் ரேவ் பார்டியில் குடிபோதையில் நிர்வாணமாக நடமாடிய சம்பவத்தில் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.