கிருஷ்ணகிரியில் தெலுங்கு வருடப்பிறப்பை ஒட்டி ரூ.10 கோடிக்கு விற்பனையான ஆடுகள்
கிருஷ்ணகிரியில் தெலுங்கு வருடப்பிறப்பை ஒட்டி ரூ.10 கோடிக்கு விற்பனையான ஆடுகள்
ரூ.10 கோடிக்கு விற்பனையான ஆடுகள்
நாளை தெலுங்கு வருடப்பிறப்பு கொண்டாடப்படும் நிலையில், குந்தாரப்பள்ளி சந்தைக்கு வழக்கத்தை விட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கூடுதலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி வார சந்தையில், தெலுங்கு வருடப்பிறப்பை ஒட்டி, 10 கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனையானது.
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறும். நாளை தெலுங்கு வருடப்பிறப்பு கொண்டாடப்படும் நிலையில், குந்தாரப்பள்ளி சந்தைக்கு வழக்கத்தை விட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கூடுதலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
ஆந்திரா மாநிலம் குப்பம், சித்தூர், கர்நாடக மாநிலம் பெங்களூர், கோலார் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் பொதுமக்கள் என சுமார் 20,000 பேர் குவிந்தனர்.
வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட ஆடு 12,000 விலை போகும். இன்று 15,000 முதல் 17,000 ரூபாய் வரையில் விலை போனது. எடைக்கு ஏற்றவாறு குறைந்தபட்சமாக ஒரு ஆடு 7,000 முதல் அதிகபட்சமாக 25,000 வரையில் விற்பனை ஆனது. இன்று ஒரு நாளில் மட்டும் குந்தாரப்பள்ளி வார சந்தையில் சுமார் 10 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனது.
-செய்தியாளர்: குமரேசன்
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.